நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார், வவுனியா மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எதிர்வுகூறியுள்ளது.
இதேவேளை மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம், காலி மற்றும் மாத்திறை மாவட்டங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழைபெய்யும்.
இதன்போது இடி, மின்னல் காரணமாக ஏற்படும் சேதங்களை குறைத்து கொள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடற்பிரதேசத்தில் மன்னாரில் இருந்து மட்டக்களப்பு ஊடாக புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.
0 comments: