Home » » கிழக்கில் கல்முனை கல்வி வலயம் முதலிடம்!

கிழக்கில் கல்முனை கல்வி வலயம் முதலிடம்!

காரைதீவு நிருபர்
கல்விப் பொதுத்தர சாதாரண தரப்பரீட்சை முடிவுகள் நேற்று வெளியாகியிருந்தன. அதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் கல்முனை கல்வி வலயம் முதல் இடத்தை பெற்றுள்ளது.
கல்முனை கல்வி வலயத்தில் 65 பாடசாலைகள் பரீட்சையில் பங்குபற்றியிருந்தன பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 79.33 விகிதமானோர் உயர்தரம் கற்பதற்கு  தகுதி பெற்றுள்ளனர். அக்கரைப்பற்று இரண்டாம் இடத்தையும் தெஹியத்தகண்டி மூன்றாம் இடத்தையும் அம்பாறை நான்காம் இடத்தையும் மட்டக்ளப்பு மத்தி ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளன.
தேசிய ரீதியில் கிழக்கு மாகாணம் கடந்த முறை 9 ஆம் இடத்தை பெற்றிருந்ததது  இம்மறை 7 ஆம் இடத்தை அடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரன் மற்றும் அண்மையில் ஒய்வு பெற்ற கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.ஜலீல் ஆகியோருக்கு அதிபர்கள்  ஆசிரியர்கள் பெற்றோர்கள் நன்றியினை தெரிவித்தனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |