Home » » சீனாவின் நரித்தந்திரம்!! அம்பலத்திற்கு வந்தது பல இரகசிய திட்டங்கள்

சீனாவின் நரித்தந்திரம்!! அம்பலத்திற்கு வந்தது பல இரகசிய திட்டங்கள்

உலக நாடுகளுக்கு கொரோனாவை ஏற்றுமதி செய்த சீனா தற்போது, அதில் இருந்து லாபம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டது என்றே கூறலாம். ஆசியா உட்பட அனைத்து நாடுகளை சேர்ந்தவர்களும், தற்போது சீனாவிற்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளனர். மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள் சீனர்களுக்கு கொரோனா தொற்றை ஏற்படுத்திவிடுவார்கள் என்ற காரணத்தை சீன அரசு சொல்கிறது.
தற்போது பாதிக்கப்பட்ட பல நாடுகளுடன் Face Mask,Hand Gloves,ventilator போன்றவற்றை இயந்திரங்கள் மூலம் உற்பத்தி செய்து, அதை பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய சீனா பேரம் பேசி வருவதாக கூறப்படுகிறது.
சீனர்களின் நரித்தந்திரத்தைப் பற்றி வெளியில் இருப்பவர்கள் சொல்லும் போது, அதை நம்பாமல் இருக்கலாம். ஆனால் அதுவே சீனாவை சேர்ந்தவர்கள் கூறியிருந்தால்? 1999-ஆம் ஆண்டு அமெரிக்காவை அழிக்க, சீனாவின் இரண்டு படை தளபதிகள் எழுதிய புத்தகம் தான் அண்ட்ரூ ஸ்டெக்டர் வார் பேர், அதாவது அமெரிக்காவை ஒருநாளும் நம்மால் ஆயுதங்களை வைத்து அழிக்க முடியாது என்பது சீன தளபதிகளுக்கு தெரியும்.
அமெரிக்காவின் பொருளாதாரத்தை அழிப்பது மட்டுமே, சீனா அமெரிக்காவை வெல்ல சரியான திட்டம் என்று அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 20 ஆண்டுகள் கழித்து சீனா அந்த புத்தகத்தில் இருப்பது போன்று, கொரோனாவை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர்.
இது தொடர்பில் மிக விரிவாக ஆராய்கிறது இக்காணொலி,

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |