Home » » கொழும்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணின் மகனுக்கும் தொற்றியது கொரோனா

கொழும்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணின் மகனுக்கும் தொற்றியது கொரோனா

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் 2 ஆவது மகனுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று இரவு வரை ஸ்ரீலங்காவில் 4 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு இருந்தனர்.
இவர்களில் 3 பேர் பெண்களாவர், இவர்கள் மட்டக்களப்பு புனானை முகாமில் தடுத்து வைக்கப்பட்டவர்களாவர்.
மற்றைய நபர் கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியல் அடையாளம் காணப்பட்ட 59 வயதான பெண்ணின் மகன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் கொரோனா சிகிச்சையளிப்பதற்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |