Home » » சற்று முன்னர் ஸ்ரீலங்காவை வந்தடைந்த விசேட விமானம்

சற்று முன்னர் ஸ்ரீலங்காவை வந்தடைந்த விசேட விமானம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்தியாவிலிருந்து 113 மாணவர்கள் ஸ்ரீலங்காவிற்கு சற்று முன்னர் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகமே ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில் இலங்கையைச் சேர்ந்த மாணவர்கள் வெளிநாடுகளில் தங்கியுள்ள நிலையில் அவர்களை நாட்டுக்கு அழைத்துவரும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
ஏற்கனவே விசேட விமானங்கள் மூலம் பல மாணவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர். நேற்றும் இந்தியாவின் மும்பை நகரில் இருந்து 163 மாணவர்கள் ஸ்ரீ லங்கன் விசேட விமானம் மூலம் அழைத்துவரப்பட்டனர்
இந்நிலையில் இந்தியாவின் கோயம்பத்துர் நகரில் உள்ள 113 மாணவர்களை அழைத்து வர சென்ற விமானம் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |