Home » » புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழ்கின்ற யாழ்ப்பாண அன்பரால் தமிழ் , முஸ்லிம் குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரண பொதி

புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழ்கின்ற யாழ்ப்பாண அன்பரால் தமிழ் , முஸ்லிம் குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரண பொதி

( அஸ்ஹர் இப்றாஹிம்)
    
தமிழர் ஊடக மையத்தின் தலைவர் த. தர்மேந்திரா, காரைதீவு ஸ்ரீ சிவசக்தி முத்துமாரி அம்மன் ஆலய பரிபாலகர் கந்த. ஜீவாகரன்  ஆகியோரின் வேண்டுகோளின்  பேரில் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கு தவம் அறக்கட்டளை நிலையத்தால்   உலர் உணவு நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.



யாழ்.ப்பாண மாவட்டத்தில் கன்பொல்லையை சேர்ந்த  . டென்மார்க்கில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற அரசியல், சமூக, பொதுநல, இலக்கிய, ஊடக செயற்பாட்டாளரான தவராசா சத்தியதாஸ் தந்தையின் பெயரில் அறக்கட்டளை நிலையம் அமைத்து சொந்த நிதியில் மிக நீண்ட காலமாக நாடு பூராவும் மனித நேய வேலை திட்டங்களை இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் மேற்கொண்டு வருகின்றார்.

அந்த வகையில் நாட்டை தற்போது ஆக்கிரமித்து உள்ள கொரோனா தொற்று அச்ச சூழலில் வாழ்வாதாரம், வருமானம் ஆகியவற்றை இழந்து தவிக்கின்ற குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்கி வருகின்றார்.
 கடந்த வாரம் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த ஒரு தொகை முஸ்லிம் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை நிவாரணமதக  வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |