ஸ்ரீலங்கா கடற்படை அதிகாரியொருவர் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெலிசர கடற்படை முகாமின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்த உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை.
இதேவேளை குறித்த அதிகாரிக்கு ஏற்கனவே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவருக்கு தொற்று இருந்திருக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், இவ் உயிரிழப்புத் தொடர்பில் சரியான தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என கடற்படைப் பேச்சாளர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
0 comments: