Home » » பொது மக்களின் பொறுப்பற்ற செயல்! கொரோனா தொடர்பில் சுகாதார அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

பொது மக்களின் பொறுப்பற்ற செயல்! கொரோனா தொடர்பில் சுகாதார அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

ஸ்ரீலங்காவில் தற்போது கொரோனா அச்சுறுத்தல் குறையவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி எச்சரித்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளிலும் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் பொது மக்கள் சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது மிகமிக குறைவாக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது பேசிய அவர்,
நாட்டில் தற்போது கொரோனா அச்சுறுத்தல் இன்னமும் குறையவில்லை. இது தொடர்பில் பொது மக்கள் போதியளவான விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

நாட்டிற்காகவும், தங்களின் பிள்ளைகளுக்காகவும் சுகாதார பிரிவு வழங்கும் ஆலோசனைகளை கடைப்பிடித்து செயற்படுமாறு ஒவ்வொருவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
ஊரடங்கு சட்டம் பல மாவட்டங்களில் தளர்ப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் நாட்டிலிருந்து நீங்கியதனை போன்றே பல இடங்களில் மக்கள் செயற்படுகின்றனர்.
சில இடங்களில் முச்சக்கர வண்டியில் 3, 4 பேர் பயணிக்கின்றனர். சில இடங்களில் சமூக இடைவெளிகள் இல்லாமல் செயற்படுகின்றார்கள். இந்த ஊரடங்கு சட்டம் மக்களுக்காக எடுக்கப்பட்ட செயற்பாடாகும். எனவே ஆலோசனைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |