Home » » பருத்தித்துறையில் கொரோனாவோடு பதுங்கி இருந்த பெண்: சுவிஸ் பாதிரியாரின் அடுத்த பலிகடா

பருத்தித்துறையில் கொரோனாவோடு பதுங்கி இருந்த பெண்: சுவிஸ் பாதிரியாரின் அடுத்த பலிகடா

2ம் இணைப்பு
இவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் சற்று முன்னர் அதிர்வு இணையத்திற்கு தெரிவித்துள்ளார்கள். இலங்கை நேரப்படி இரவு 9 மணிக்கு இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலதிக சிகிச்சைக்காக குறித்த பெண்மணியை கொழும்புக்கு அனுப்ப வாய்ப்புகள் உள்ளது என்ற தகவலும் கிடைத்துள்ளது.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
1ம் இணைப்பு
இது நாள் வரை தன்னை அடையாளம் காட்டாமல், பருத்தித்துறையில் பதுங்கி இருந்த பெண். இன்று வைத்தியசாலை சென்று சரணடைந்தார். அவரது உடல் நிலை மிகமோசம் அடைந்ததை அடுத்தே அவர் யாழ் வைத்தியசாலைக்கு சென்றிருக்கிறார்.
இது நாள் வரை சுவிஸ் பாதிரியாரின் கூட்டத்திற்கு சென்ற அனைவரையும் பொலிசார் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறார்கள். ஆனால் குறித்த பருத்தித்துறையில் பெண் மட்டும் பொலிசாருக்கு டிமிக்கி கொடுத்து மறைவாக இருந்து வந்துள்ளார். ஆனால் கொரோனா அவரையும் விட்டுவைக்கவில்லை.
இன் நிலையி தான் அவர் இன்று வைத்தியசாலை சென்று தஞ்சமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனன். இவர் இது நாள் வரை எத்தனை பேருக்கு பரப்பினார் என்று தெரியவில்லை.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |