Home » » முட்டாள் தினத்தில் இடம்பெற்ற கோர விபத்து - இளைஞன் உயிரிழந்ததை நம்ப மறுத்த குடும்பத்தினர்

முட்டாள் தினத்தில் இடம்பெற்ற கோர விபத்து - இளைஞன் உயிரிழந்ததை நம்ப மறுத்த குடும்பத்தினர்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட் சவுக்கடியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தை வீட்டாருக்கு தெரியப்படுத்தியவேளை அவர்கள் ஏப்ரல் முட்டாள்தினமென தெரிவித்து அதனை நம்ப மறுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
ஏறாவூர் சவுக்கடி கடற்கரை வீதியில் நேற்று (01) பிற்பகல் 4.30 மணியளவில் உழவு இயந்திரமொன்றில் அதிவேகமாக பயணித்ததால் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் அருகாமையில் பனை மரமொன்றில் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மட்டக்களப்பு, வாகரை பனிச்சங்கேணியைச் சேர்ந்த எஸ். சுரேஸ்காந் (22) என்பவரே பலியாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
வாகரையில் உள்ள உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தாருக்கு சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தொலைபேசி மூலம் பலியான விடயத்தைக் கூறியுள்ளனர். அதற்கு அவர்கள் இன்று ஏப்ரல் ஃபூல் (உலக முட்டாள்கள் தினம்) எங்களுக்குத் தெரியும் தொலைபேசியை வையுங்கள் என்று அழைப்பை துண்டித்துள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |