மூன்றாம் இணைப்பு
கொரோனா தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 477 ஆக அதிகரித்துள்ளது.!
இன்றைய தினம் 25 கொரோனாத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்
இரண்டாம் இணைப்பு
ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 471 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்திவந்த நிலையில் தற்போது ஸ்ரீலங்காவில் தனது வீரியத்தை காட்ட ஆரம்பித்துள்ளது.
தற்போதுவரை ஸ்ரீலங்காவில் 467 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
467 பேரிற்கு தொற்று ஏற்பட்டிருந்தாலும் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 120 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு மேலும் பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருவதாக சுகாதார அமைச்சு கூறுகிறது.
இதேவேளை, பொது மக்கள் தொடர்ந்தும் சமூக இடைவெளிகளை பேணுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
0 comments: