கொரோனா காரணமாக உலக நாடுகள் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் சீனா புதிய நடவடிக்கையாக தற்போது டிஜிட்டல் பணத்தை சோதனை முயற்சியில் வெளியிட தொடங்கி உள்ளது.
உலகமே கொரோனா காரணமாக ஸ்தம்பித்து போய் உள்ளது.
இதில் இருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.
ஒரு பக்கம் உலக நாடுகள் இப்படி திணறி வர இன்னொரு பக்கம் சீனாவில் பொருளாதாரம் சீரடைய தொடங்கி உள்ளது. கொரோனா தொடர்பான உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் சீனாவில் பொருளாதாரம் மிக வேகமாக வளர தொடங்கி உள்ளது.
இந்த நிலையில்தான் சீனா தனது அடுத்த நகர்வை செய்ய தொடங்கி இருக்கிறது. உலக நாடுகளுக்கு உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய தொடங்கி உள்ள சீனா தற்போது தங்கள் நாட்டிற்குள் டிஜிட்டல் கரன்சி எனப்படும் டிஜிட்டல் பணத்தை அமுலுக்கு கொண்டு வந்துள்ளது.
இது தொடர்பாக விரிவாகவும் மற்றும் ஏனைய பல தகவல்களுடனும் இன்றைய முக்கிய செய்திகள்
0 comments: