Home » » தனிமைப்படுத்தலுக்குள்ளாகி வீடு திரும்பிய இளைஞனுக்கு 3 நாட்களுக்குப் பின் ஏற்பட்ட நிலை!

தனிமைப்படுத்தலுக்குள்ளாகி வீடு திரும்பிய இளைஞனுக்கு 3 நாட்களுக்குப் பின் ஏற்பட்ட நிலை!

கல்பிட்டி பகுதியில் வெளிநாட்டிலிருந்து வந்த நபர் ஒருவர் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
நுரைச்சோலை - ஆழங்குடா பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த மாதம் கென்யாவிற்கு சுற்றுலா சென்று நாட்டிற்கு வருகை தந்த நிலையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டு வீடு திரும்பிய பின்னர் சுமார் 3 தினங்கள் கடந்த நிலையில் குறித்த இளைஞர் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய மலேரியா ஒழிப்பு நடவடிக்கையின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர இதனை தெரிவித்துள்ளார்.
மலேரியா நோயினை முழுமையாக கட்டுப்படுத்திய நாடாக இலங்கை பெயர்பெற்றுள்ள போதிலும் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |