Home » » மட்டக்களப்பில் கடந்த 24 மணிநேரத்தில் 33 பேர் கைது ; 7 வாகனங்கள் மீட்பு

மட்டக்களப்பில் கடந்த 24 மணிநேரத்தில் 33 பேர் கைது ; 7 வாகனங்கள் மீட்பு


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய மற்றும் கசிப்பு விற்பனை ஆகிய சம்பவங்களுடன் 33 பேரை கைது செய்துள்ளதுடன் 7 வாகனங்களையும் மீட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வெள்ளிக்கிழமை (17) காலை 6 மணி தொடக்கம் இன்று சனிக்கிழமை (18) காலை 6 மணிவரையில் ஆயித்தியமலை, வவுணதீவு, வாழைச்சேனை. ஏறாவூர், களுவாஞ்சிக்குடி, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு ஆகிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மீறி நடமாடிய 29 பேரை கைது செய்துள்ளதுடன் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் உட்பட 7 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை ஆயித்தியமலை, வவுணதீவு , ஏறாவூர் பொலிஸ் பிரிவில் கசிப்புடன் 4 பேரை கைதுசெய்துள்ளதுடன் ஒரு தொகை கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை மே மாதம் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளதுடன் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் கடந்த 24 மணிநேரத்தில் 33 பேர் கைது ; 7 வாகனங்கள் மீட்பு

Rating: 4.5
Diposkan Oleh:
Dicksith
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |