நேற்று வெள்ளிக்கிழமை (17) காலை 6 மணி தொடக்கம் இன்று சனிக்கிழமை (18) காலை 6 மணிவரையில் ஆயித்தியமலை, வவுணதீவு, வாழைச்சேனை. ஏறாவூர், களுவாஞ்சிக்குடி, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு ஆகிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மீறி நடமாடிய 29 பேரை கைது செய்துள்ளதுடன் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் உட்பட 7 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை ஆயித்தியமலை, வவுணதீவு , ஏறாவூர் பொலிஸ் பிரிவில் கசிப்புடன் 4 பேரை கைதுசெய்துள்ளதுடன் ஒரு தொகை கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை மே மாதம் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளதுடன் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
0 comments: