Home » » நாடாளுமன்றத்தேர்தல் எப்போது?வெளிவந்தது வர்த்தமானி

நாடாளுமன்றத்தேர்தல் எப்போது?வெளிவந்தது வர்த்தமானி

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதிக்கு பின்னரேயே நடத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலையும் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பை தெரிவு செய்யும் நாளாக 2020 ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பதினான்கு நாட்களுக்குப் பிறகு வரும் ஒரு நாளை தேர்தல் ஆணையம் நியமிக்கும்.
தேர்ந்தெடுக்கப்படும் திகதி உரிய நேரத்தில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |