உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனிமைப்படுத்தப்பட்டள்ளார்.
இங்கிலாந்தில் இளவரசர் சார்லஸ், பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக பெஞ்சமின் நேதன்யாகு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை 4347 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
0 Comments