Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஊரடங்கு சட்டத்தை மீறிய இளைஞர் விபத்தில் பலி


ஊரடங்கு சட்டத்தை மீறி மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 17 வயதான இளைஞர் ஒருவர் நோயாளர் காவு வாகனத்துடன் மோதுண்டு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் இன்று வெயாங்கொட என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.
வீதியில் மோட்டார் சைக்கிளை இவர் ஓட்டிச்சென்றபோது காவல்துறையினர் நிறுத்துமாறு கூறியபோதும் அவர் அதனை நிறுத்தாமல் சென்றுள்ளார்.
இதன்போது தனியார் வைத்தியசாலை ஒன்றின் நோயாளர் காவு வாகனம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
குறித்த மோட்டார் சைக்களில் பின்னால் அமர்ந்து சென்றவர் காயங்களுடன் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படும் நோயாளர் காவு வாகனம் அந்த இடத்தில் இருந்து தப்பிசென்ற நிலையில் பின்னர் யக்கல பகுதியில் வைத்து அதன் சாரதியும் உதவியாளரும் கைதுசெய்யப்பட்டனர்.
இதேவேளை ஊரடங்கு சட்டத்தை மீறியதாக கூறப்படும் 132 பேர் நேற்று முதல் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments