ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ள 28 பேரில் ஒரு இராணுவ அதிகாரியும் உள்ளடங்குவதாக தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள இராணுவ அதிகாரி வெளிநாடுகளிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் பயணிகளை தடுப்பு முகாங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த அதிகாரி, தற்போது அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
ஸ்ரீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கொரோனா தனிமைப்படுத்தலுக்காக நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 12 முகாம்களில் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது நாடு முழுவதும் உள்ள தடுப்பு நிலையங்களில் 15 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தமாக 204 பேர் தடுத்து வைக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளமை சுடடிக்காட்டத்தக்கது.
0 comments: