Home » » கல்முனை-சென்ரல்கேம் பகுதியில் கொரோனா சந்தேகத்தில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

கல்முனை-சென்ரல்கேம் பகுதியில் கொரோனா சந்தேகத்தில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

அம்பாறை கல்முனை-சென்ரல்கேம் பகுதியில் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் நேற்று (18) மேற்கொள்ளப்பட்ட மேற்பார்வையின் போது கொரோனா சந்தேகத்தின் பேரில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சுகாதார வைத்திய அதிகாரி (டாக்.ஜே. மதன்) தலைமையில் குறித்த மேற்பார்வை திட்டமிடல் மேற் கொள்ளப்பட்டது இதன் போது சென்றல்கேம்-3 பகுதியை சேர்ந்த கட்டாரில் இருந்து வந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டதையடுத்து குறித்த நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

பின்னர் குறித்த நபருக்கு நோய்த்தொற்றுக்குள்ளான அறிகுறிகள் ( இருமல், தொண்டை நோ, மூச்செடுப்பதில் சிரமம்) காணப்பட்டதனையடுத்து அவரை உடனடியாக அவசர அம்புயுலான் சேவை( 1990) ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |