Home » » பிள்ளையானுக்கு தேர்தலில் போட்டியிட நீதிமன்றம் அனுமதி

பிள்ளையானுக்கு தேர்தலில் போட்டியிட நீதிமன்றம் அனுமதி



(கனகராசா சரவணன்)
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) நாடாளுமன்ற தேர்தலில்; போட்டியிடுவதற்காக மட்டு சிறைச்சாலையில் வேட்பு மனுத் தாக்கல் hசெய்வதற்கு அனுமதி வழங்கி அதற்கான உரிய நடவடிக்கையை செய்யுமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு இன்று வியாழக்கிழமை (12) சிவில் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ் கட்டளையிட்டுள்ளார்.

கடந்த 2005 ம் ஆண்டு டிசம்பர் 25 திகதி பாராளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கம் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சந்திரகாந்தன் உட்பட 5 பேரை சந்தேகத்தில் 2015-10-; 11 ம் திகதியிலிருந்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்..

இந்த நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) சிறையில் இருந்து போட்டியிடுவதற்காக சிவில் நீதிமன்றில் அனுமதியை கோரியிருந்தார் இதனையடுத்து இன்று வியாழக்கிழமை (12) சிவில் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ் பரீசிலனைக்கு இதை எடுத்து கொண்டார்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று 12ம் திகதியில் இருந்து 19 ம் திகதி வரையிலான காலத்திற்குள் வேட்பு மனுதாக்குதல் செய்வதற்காக அனுமதியை வழங்கியதுடன் இந்த வேட்பு மனு தாக்கலை சிறைச்சாலையில் மேற்கொள்ளுமாறும் அதற்கான உரிய நடவடிக்கையை சிறைச்சாலை அத்தியட்சகர் மேற்கொள்ளுமாறும் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.
பிள்ளையானுக்கு தேர்தலில் போட்டியிட நீதிமன்றம் அனுமதி

Rating: 4.5
Diposkan Oleh:
Dicksith
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |