அரச மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மருந்தகங்களையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சீ . டீ . விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
தற்போது ஏற்பட்டிருக்கும் நிலையில், அரச மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மருந்தகங்களையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதேவேளை, இதற்கமைய மருந்துகளை வீடுகளுக்கு சென்று வழங்குவதற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கு சென்று பகிர்ந்தளிப்பது தொடர்பில் சிறப்பு சந்தை வர்த்தக நிலையங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த சிறப்பு சந்தை வர்த்தக நிலையங்கள் பொது மக்களுக்கு விற்பனை செய்ய திறந்து வைக்கப்படுமாயின் உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
0 comments: