Home » » தேசிய பாடசாலை ஆசிரிய இடமாற்றங்கள் இடைநிறுத்தம்.

தேசிய பாடசாலை ஆசிரிய இடமாற்றங்கள் இடைநிறுத்தம்.


|தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றங்கள் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

நேற்று கல்வி அமைச்சில் ஆசிரி தொழில்.சங்கங்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய பாடசாலைகளில் பத்து வருடங்கள் சேவையாற்றிய ஆசிரியர்கள் இடமாற்றம் பெறுவதற்கான ஏற்பாடுகளை இடமாற்ற சபை மேற்கொண்டிருந்தது. இதனை இடநிறுத்துமாறு கல்வி அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.


இத்தீர்மானத்திற்கு ஆசிரிய இடமாற்ற சபை உறுப்பினர்கள் தமது எதிர்ப்பினைத் தெரிவித்த போதிலும் அது தொடர்பான அமைச்சின் தீர்மானத்தை பின்னர் அறிவிப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் சித்ரானந்த தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |