Home » » குருக்கள்மடத்தின் ஐய்யனார் கோவிலுக்கு முன்னால் மின்கம்பத்தில் மோதி பாரிய விபத்து

குருக்கள்மடத்தின் ஐய்யனார் கோவிலுக்கு முன்னால் மின்கம்பத்தில் மோதி பாரிய விபத்து

குருக்கள்மடத்தின் ஐய்யனார் கோவிலுக்கு முன்னால் மின்கம்பத்தில் மோதி பாரிய விபத்து இந்த விபத்தானது 23.01.2020 காலையில் இடம் பெற்றுறள்ளது. இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பஸ் வண்டியே விபத்துக்குள்ளாகி உள்ளது. மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக செய்தி .............

மட்டக்களப்பு - கல்முனை வீதியில் இடம்பெற்ற விபத்தில் மின்கம்பம் உடைந்து வீழ்ந்ததில் பிரதேசத்திற்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குருக்கள்மடம் பகுதியில் இன்று அதிகாலை பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன்போது மின்கம்பம் உடைந்து வீழ்ந்ததில் பிரதேசத்திற்கான மின் விநியோகம் திடீரென துண்டிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,
யாழ்ப்பாணத்திலிருந்து திருக்கோவில் சென்று கொண்டிருந்த பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் குருக்கள்மடம் ஐயனார் கோயிலுக்கு முன்னால் வீதி மருங்கிலிருந்த மின்கம்பத்தில் மோதுண்டுள்ளது.
மின்கம்பம் இரண்டாக முறிந்து பேருந்தில் வீழ்ந்துள்ள போதும் எவ்வித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆயினும் பேருந்திற்குச் சேதமேற்பட்டுள்ளதோடு, களுவாஞ்சிக்குடி மின் விநியோகப் பிரதேசத்தில் மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பில் காத்தான்குடி போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |