Advertisement

Responsive Advertisement

வெளிச்சத்துக்கு வந்தது ரணில் தரப்பின் திருட்டுத்தனம்!

கடந்த அரசாங்கம் திருட்டுத்தனமாக இரண்டு விதமான மில்லேனியம் சவால் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது. ஆட்சிமாற்றத்தின் பின்னரே அதனை நாங்கள் கண்டுபிடித்தோம் என சிறிய நடுத்தர தொழித்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
“கடந்த அரசாங்கம் திருட்டுத்தனமாக இரண்டு விதமான மில்லேனியம் சவால் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது. ஆட்சிமாற்றத்தின் பின்னரே அதனை நாங்கள் கண்டுபிடித்தோம். அதற்கு அமைச்சரவை அங்கிகாரமும் பெறப்படவில்லை. அதற்கடுத்த ஒப்பந்தங்களை செய்வதற்காக அமைச்சரவை அங்கிகாரத்தையும் பெற்றுக்கொண்டிருந்தார்கள்.
எனினும் அந்த தீர்மானத்தை நாங்கள் இரத்து செய்தோம். இதுகுறித்து நிபுணத்துவம் கொண்டுள்ள நான்கு பேரை நியமித்து, இந்த ஒப்பந்தங்கள் குறித்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நடவடிக்கை எடுத்துள்ளோம்.
கடந்த அரசாங்கம் திருட்டுத்தனமாக இரண்டு ஒப்பந்தங்களை செய்துகொள்ளாமல் இருந்திருந்தால் அவற்றை மீள்பரிசீலனை செய்யாமல் இரத்து செய்திருப்போம்.
நாட்டிற்கும் திருட்டுத்தனமாக கடந்த அரசாங்கத்தினால் இரண்டு ஒப்பந்தங்களை செய்தபடியினால் ஆட்சியிலுள்ள அரசாங்கம் என்ற வகையில்தான் அந்த ஒப்பந்தங்களை மீள்பரிசிலனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
ஆனால் அந்த ஒப்பந்தங்களை திருட்டுத்தனமாக செய்தவர்கள் இன்று ஏன் அவற்றை புதிய அரசாங்கம் கிழித்தெறியவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள்” என்றார்.

Post a Comment

0 Comments