( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் முஹம்மட் அமீன் முஹம்மட் கைஸான் உயிரியல் விஞ்ஞானத்துறையில் மூன்று பாடங்களிலும் அதி திறமைச் சித்தியான ” ஏ ” சித்திகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதன்னிலையும் தேசிய ரீதியில் 132 வது இடத்தினையும் பெற்று மருத்துவத்துறைக்கு தெரிவு செய்யப்படவுள்ளார்.அத்துடன் பொது ஆங்கிலத்திலும் ” ஏ ” சித்தியினை பெற்றுள்ளார்.கல்முனையைச் சேர்ந்த டொக்டர் எம்.ஏ.சி.எம்.அமீன் , டொக்டர் நிஜாமியா அமீன் தம்பதிகளின் இரண்டாவது புதல்வராவார்.இவ்விரண்டு வைத்தியர்களும் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் பழைய மாணவர்களாகும். அத்துடன் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் இருந்து முதன் முதலாக வைத்தியத்துறைக்கு தெரிவு செய்யப்பட்ட முதல் பெண் வைத்தியர் என்ற பெருமையையும் இவரின் தாய் நிஜாமியா அமீன் பெற்றுக் கொண்டுள்ளார்.
0 Comments