பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் போதனைசார் பணியாள் தொகுதியினர் எவரும் சட்டத்தரணிகளாகச் செயற்பட முடியாது என்றும், போதனைசார் பணியாளர்கள் தமது வழக்கமான பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், அவ்வப் பல்கலைக்கழகங்களின் - கல்வி நிறுவனங்களின் பேரவை அனுமதியுடன் நொத்தாரிசுக்களாக பணியாற்ற முடியும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முடிவு செய்திருக்கிறது.
|
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தின் அவதானங்களுக்கு அமைவாக 21.11.2013 அன்று நடைபெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 885 ஆவது கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து, 05.09.2019 இல் நடைபெற்ற ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 1017 ஆவது கூட்டத்தில் இந்தத் தீர்மானம் உறுதி செய்யப்பட்டிருதது.
இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மெஹானட டி சில்வா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 10 / 2019 ஆம் இலக்க தாபனச் சுற்றறிக்கையின் மூலம் சகல பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் அறிவித்திருக்கிறார்.
|
Home »
எமது பகுதிச் செய்திகள்
» பல்கலைக்கழக ஆசிரியர்கள் சட்டத்தரணிகளாக பணியாற்றத் தடை!
பல்கலைக்கழக ஆசிரியர்கள் சட்டத்தரணிகளாக பணியாற்றத் தடை!
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: