Home » » மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள்!


மட்டக்களப்பு மாவட்டத்தில் 2019ம் ஆண்டு ஐனவரி 1ம் திகதியில் இருந்து இதுவரை 2036 பேர் டெங்குத் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர்,

இந்தவாரம் டெங்கு தாக்கத்தினால் அதிகமாக பாதிப்புக்குள்ளான மட்டக்களப்பு பிரிவில் இதுவரை 35 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

அது போன்று ஆரையம்பதி 39 பேர் களுவாஞ்சிகுடி 24 பேர் வாழைச்சேனை 13 பேர், காத்தான்குடி 10 பேர், செங்கலடி 09 பேர் , ஏறாவூர் 09 பேர் , பட்டிப்பளை 09பேர் ,வெல்லாவெளி 04 பேர், வவுனதீவு 02 பேர் ,கோரளைப்பற்று மத்தி 02 ,கிரான் 01 ஆகிய பகுதியில், இனங்காணப்பட்டுள்ளனர்.

மொத்தமாக கடந்தவாரம் 157 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

மட்டக்களப்பு மக்கள் சற்று விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்பரவாக வைத்து கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிபனையில் டெங்கு கட்டுப்பாடு பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வே.குணராஜசேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |