Home » » அம்பாறையில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

அம்பாறையில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது


அம்பாறையில் டிப்பர் வாகனத்தின் மூலம் சட்டவிரோத முறையில் மணல் அகழ்ந்த குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை, வீரச்சோலை, வழுக்கமடு பகுதியில் நேற்றிரவு சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதன்போது சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு கொண்டிருந்த சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களை கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக இப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடவடிக்கை இடம்பெற்றுவருவதாக குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |