( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
தமிழ் இலங்கையர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் கலைஞர்களுக்கான அரச விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு தாமரை தடாக கலையரங்கில் நடைபெற்றபோது பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி , பிரதி அதிபரும் சமாதான நீதவானுமாகிய கலாநிதி நாராயணபிள்ளை நாகேந்திரன் அவரின் தொடர்ச்சியான கலைப்பணியை பாராட்டி ” கலைச்சுடர் ”விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.இவரின் சமூக , கலை , கல்வி , சமய ரீதியிலான பல்வேறு சேவைகளை பாராட்டி அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் பத்திற்கும் மேற்பட்ட கௌரவிப்பு பட்டங்களை அண்மைக்காலத்தில் தமதாக்கிக் கொண்டவர்.அத்துடன் தேசிய கல்வி நிறுவன கல்விமாணி கற்கை நெறியின் பிராந்திய நிலைய விரிவுரையாளராகவும் பணியாற்றியதுடன் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படும் புதிய பாட நூலாக்கல் பணியின் எழுத்தாளராகவும் பதிப்பாளராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 Comments