எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறை நடத்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.
தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்த இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.
புதிய தேர்தல் முறைமை அமுல்படுத்துவது தொடர்பான பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. இதன் காரணமாக பழைய முறையின்படி தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
9 மாகாண சபைகளின் பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்துள்ளதுடன் அவை ஆளுநர்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.
0 comments: