Home » » அண்மையில் வெளியிடப்பட்ட 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது கோட்டமட்ட பாடசாலை மாணவர்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

அண்மையில் வெளியிடப்பட்ட 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது கோட்டமட்ட பாடசாலை மாணவர்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

இதனடிப்படையில் சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்திலிருந்து 42 மாணவர்களும் , சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையிலிருந்து 19 மாணவர்களும் , சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயத்திலிருந்து 2 மாணவர்களும் , சாய்ந்தமருது அல் கமருன் வித்தியாலயத்திலிருந்து 1 மாணவரும்  , சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்திலிருந்து 2 மாணவர்களுமாக மொத்தம் 66 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
கடந்த வருடம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 44  மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |