Advertisement

Responsive Advertisement

அண்மையில் வெளியிடப்பட்ட 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது கோட்டமட்ட பாடசாலை மாணவர்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

இதனடிப்படையில் சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்திலிருந்து 42 மாணவர்களும் , சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையிலிருந்து 19 மாணவர்களும் , சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயத்திலிருந்து 2 மாணவர்களும் , சாய்ந்தமருது அல் கமருன் வித்தியாலயத்திலிருந்து 1 மாணவரும்  , சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்திலிருந்து 2 மாணவர்களுமாக மொத்தம் 66 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
கடந்த வருடம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 44  மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Post a Comment

0 Comments