(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
அண்மையில் வெளியிடப்பட்ட 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கல்முனை கல்வி வலயத்தில் 425 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
கல்முனை முஸ்லிம் கோட்டத்தில் 110 மாணவர்களும் , கல்முனை தமிழ் கோட்டத்தில் 131 மாணவர்களும் , சாய்ந்தமருது கோட்டத்தில் 66 மாணவர்களும் , காரைதீவு கோட்டத்தில் 58 மாணவர்களும் , நிந்தவுர் கோட்டத்தில் 60 மாணவர்களும் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
கடந்த வருடம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கல்முனை முஸ்லிம் கோட்டத்தில் 119 மாணவர்களும் , கல்முனை தமிழ் கோட்டத்தில் 85 மாணவர்களும் , சாய்ந்தமருது கோட்டத்தில் 44 மாணவர்களும் , காரைதீவு கோட்டத்தில் 26 மாணவர்களும் , நிந்தவுர் கோட்டத்தில் 42 மாணவர்களுமாக 316 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்றிருந்தனர்.
0 comments: