இலங்கையில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் டிரெண்ட் போல்ட்டின் ஹெல்மெட்டுக்குள் பந்து சிக்கிக்கொண்ட சம்பவம் மைதானத்தில் சிரிப்பலையை எழுப்பியது.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நியூசிலாந்து அணியின் முதல் இனிங்சின் 82வது ஓவரை இலங்கை பந்துவீச்சாளர் லசித் எம்புல்தெனிய வீச டிரெண்ட் போல்ட் எதிர்கொண்டார்.
அப்போது பந்துவீச்சாளர் வீசிய பந்து துடுப்பில் பட்டு போல்ட்டின் ஹெல்மெட்டுக்குள் சென்று சிக்கிக்கொண்டது. உடனே பந்தை காணவில்லை என்பது போல டிரெண்ட் போல்ட் தேடினார். பின்னர் போல்ட்டின் ஹெல்மெட்டில் பந்து சிக்கிக்கொண்டதை மற்ற வீரர்கள் கவனித்தனர். இந்த சம்பவத்தால் மைதானத்தில் சிரிப்பலை எழுந்தது.
0 comments: