சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கும் வகையில் பதுளையில் நேற்று பாரிய மக்கள் பேரணி ஒன்று நடத்தப்பட்டிருந்தது. அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை ஏற்பாடு செய்திருந்தார்.
மெருமளவு மக்கள் கூட்டத்தில் சிக்கித் தவித்த சஜித்துக்கு மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது. இதன்போது மேடையில் வைத்து மாலைகள் அணிவிக்கப்பட்டன.
சஜித் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதற்கான ஆயுத்த நடவடிக்கையாக நேற்றைய கூட்டம் இடம்பெற்றது. இதன்போது மலை அணிவித்தவர் கீழே விழுந்தமை அபசகுணமாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சிங்கள அரசியல்வாதிகள் ஜோதிடம் மீதும் சகுணம் மீதும் அளவுகடந்த நம்பிக்கை வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: