Home » » சஹ்ரானின் ஆயுத பயிற்சி முகாம்களில் பயிற்சி! இன்றும் கைதான மூவர்!

சஹ்ரானின் ஆயுத பயிற்சி முகாம்களில் பயிற்சி! இன்றும் கைதான மூவர்!

இலங்கையில் தடை செய்யப்பட்ட ஜமாதே மில்லது இப்ராஹிம் அமைப்பின் மேலும் 3 உறுப்பினர்கள் அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் மாவனல்லை பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸாரால் தெரிவிக்கப்படுகின்றது.
அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களில் இருவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என கூறப்படும் சஹ்ரான் ஹாசிமுடன் நுவரெலியாவில் ஆயுதப் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் மற்றுமொரு சந்தேகநபர் ஹம்பாந்தோட்டையில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளமையும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |