Home » » ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ தாந்தாமலை முருகன் ஆலய தீர்த்தோற்சவம்

ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ தாந்தாமலை முருகன் ஆலய தீர்த்தோற்சவம்

கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்று விளங்கும் தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம் இன்று காலை ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ இடம்பெற்றுள்ளது.
கடந்த மாதம் 25ஆம் திகதி கொடியேற்றத்துடன் உற்சவம் ஆரம்பமாகிய நிலையில் தொடர்ச்சியாக திருவிழாக்கள் நடைபெற்று வந்தன.
இறுதிநாள் திருவிழாவானது நேற்றைய தினம் இரவு நடைபெற்றிருந்தது. இதற்கான உபயத்தினை முனைக்காடு கிராம மக்கள் வழங்கியிருந்தனர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் பல பாகங்களிலும் இருந்து வருகைதந்து தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய திருவிழாவில் பங்கேற்றிருந்தனர்.

இவ்வாறான நிலையில் இன்று காலை முருகப்பெருமானுக்கு பூஜை ஆராதனைகள் இடம்பெற்றதனை தொடர்ந்து, தாந்தாமலை முருகப்பெருமானின் புண்ணிய தீர்த்தக்குளத்தில் திருவோண நட்சத்திரத்தில் தீர்த்தோற்சவம் நடத்தப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து பொன்னூஞ்சல் நிகழ்வும் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |