Advertisement

Responsive Advertisement

யாழ்ப்பாண மக்களுக்கு காலடியில் வந்துள்ள விமானப்பயணம்: ஒக்டோபர் 15 இல் திறக்கப்படுகிறது!

பலாலி விமான நிலையம் எதிர்வரும் ஒக்டோபர் 15 ம் திகதி உத்தியோகபூர்வமாக திறக்கப்படவுள்ளது.இந்த திறப்பு விழாவுக்குப் பின்னர் இந்தியாவுக்கான பிராந்திய விமான சேவைகள் ஆரம்பமாகும் எம பிரதமர் அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இன்றையதினம் அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் விமான நிலையத்தில் கட்டுமான முன்னேற்றம் குறித்து அதிகாரிகள் இடையே கலந்துரையாடல் நடைபெற்றது.
முப்பது வீதத்திற்கும் அதிகமான கட்டுமான நடவடிக்கைகள் முடிவடைந்த நிலையில் மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் இணைப்புகள் இதுவரை முடிக்கப்படவில்லை என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.
எனினும், தேசிய நீர் வழங்கல் சபையின் நீர்விநியோகம் விமான நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதால் நீர் வழங்கலைப் பெறுவதில் சிக்கல் உள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி, இந்த பிரச்சினையை தீர்க்க கடற்படையின் உதவியுடன் ஒரு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலமாக கடல் நீரைப் பயன்படுத்தலாம் என்று பிரதமர் பரிந்துரைத்திருந்தார்.
விமான நிலையத்தில் சுங்க, குடியேற்றம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட அலுவலகங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ரணதுங்க தெரிவித்தார்.
உள்நாட்டு விமான நிலையம் இரண்டு கட்டங்களாக சர்வதேச விமான நிலையமாக ரூ .2.2 பில்லியன் செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது, முதல் கட்டமாக இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments