Home » » மூவாயிரத்துக்கும் மேற்பட்டோரை பத்து நாட்களில் கைது செய்த பொலிஸார்!

மூவாயிரத்துக்கும் மேற்பட்டோரை பத்து நாட்களில் கைது செய்த பொலிஸார்!

மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைதுசெய்வதற்கான விசேட வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மது போதையில் வாகனம் செலுத்திய 3,154 சாரதிகள் 10 நாட்களில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (14) காலை 6.00 மணியிலிருந்து இன்று (15) காலை 6.00 மணி வரையான 24 மணித்தியாலத்தில் மது போதையில் வாகனம் செலுத்திய 279 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
மது போதையில் வாகனங்களை செலுத்துவோரை கைதுசெய்வதற்கான விசேட வேலைத்திட்டம் கடந்த 05 ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய, ஜூலை 05 ஆம் திகதியிலிருந்து இன்று வரையான 10 நாட்களில் 3,154 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |