Home » » பால்மா தொடர்பில் மீளவும் எழுந்துள்ள சர்ச்சை!

பால்மா தொடர்பில் மீளவும் எழுந்துள்ள சர்ச்சை!

இறக்குமதி செய்யப்படும் பால் மா தொடர்பில் தெளிவான கருத்தொன்றை அரசாங்கம் மக்களுக்கு வழங்க வேண்டும் என நோயாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த அமைப்பின் தலைவர் தம்மிக எதிரிசிங்க தெரிவிக்கையில்
சில அரசியல்வாதிகளினால் வெளிநாட்டு ஆய்வு கூடங்களுக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாக கூறப்படும் பால் மா மாதிரிகள் குறித்த பரிசோதனை அறிக்கை பகிரங்கப்படுத்த வேண்டும் .
மனித உடலுக்கு ஒவ்வாத பல்வேறு இரசாயனப் பதார்த்தங்கள் அடங்கியுள்ளதாக தெரிவித்து, இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கு எதிராக அரசியல்வாதிகளும், வைத்திய அமைப்புக்களும் இதுவரையில் தெரிவித்து வந்த கருத்துக்கள் மறக்கடிக்கப்பட்டுள்ளன. இதனால், மக்கள் அவ்வாறான பால்மாவை பயன்படுத்துவதா? இல்லையா? என்று அறியாமலேயே பயன்படுத்தி வருகின்றனர்.
இறக்குதி செய்யப்படும் பால் மா பிரச்சினை தொடர்பில் ஏற்றுக் கொள்ளத் தக்க தீர்வொன்றை அரசாங்கமோ அல்லது அது தொடர்பான அமைப்புக்களோ இதுவரையில் முன்வைக்கவில்லை. பால் மா நிறுவனங்களினால் மறைக்கப்பட்டு வரும் உண்மையை மக்களுக்கு தெளிவுபடுத்துவது பொறுப்பான அரசாங்கத்தின் கடப்பாடு எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |