90 ஆயிரம் சிங்கள மற்றும் தமிழ் பெண்கள் திருமணத்தின் மூலம் இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளதாக ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
கடந்த 10 வருட காலப் பகுதியில் மாத்திரம் 90 ஆயிரம் சிங்கள, தமிழ் பெண்கள் மதம் மாற்றப்பட்டுள்ளனர்.
அடுத்து வரும் புதிய அரசாங்கத்தின் கீழ் இந்த 90 ஆயிரம் பேர் தொடர்பில் விசாரணையொன்றை நடாத்தி, விரும்பியவர்களுக்கு தான் ஏற்கனவே இருந்த சமயத்துக்கு செல்வதற்கு வழியமைத்துக் கொடுப்போம்.
பாடசாலை வயதிலுள்ள பெண் பிள்ளைகளை திருமணம் முடிக்க முடியாது என்ற சட்டம் நாட்டில் அமுலில் இருந்தும், பயங்கரவாதி சஹ்ரான் பாடசாலை செல்லும் 8 ஆம் ஆண்டு பிள்ளையை திருமணம் முடித்த போது தடுக்க முடியவில்லை.
புதிய அரசாங்கத்தில் பாடசாலை செல்லும் பிள்ளைகளை மணம் முடிக்கத் தடை செய்யும் விதத்தில் கடுமையான சட்டமொன்றையும் கொண்டுவரப் போவதாகவும் தேரர் மேலும் கூறினார்.
0 comments: