(வரதன்)
மட்டக்களப்பு வின்சென்ற் தேசிய பாடசாலையில் 200வது ஆண்டுநிறைவைவையொட்டியும் வருடாவருடம் பழைய மாணவர்களினால் பல சமூகநலப் பணிகள் நடாத்தப்பட்டு வருகின்றன.
அதனொரு நிகழ்வாக மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் விபத்துக்கள் சத்திரசிகிச்சைகள் போன்றவற்றிற்கு அதிகளவிலான இரத்தம் தேவைப்படுவதனால் மட்-போதனா வைத்தியசாலையில் அடிக்கடி ஏற்படும் இரத்த தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யவும் கருத்திற்கொண்டு பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் இம்முறையும் இடம்பெற்றது.
மட்-போதனா வைத்தியசாலை இரத்தவங்கி வைத்தியர் தாதி உத்தியோகத்தர்கள் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் இரத்தம் வழங்குனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments: