Home » » கிழக்கு- முன்னாள் ஆளுனருக்கு எதிராக காத்தான்குடி பொலிசில் முறைப்பாடு..!!

கிழக்கு- முன்னாள் ஆளுனருக்கு எதிராக காத்தான்குடி பொலிசில் முறைப்பாடு..!!



கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளரினால் (ஈரோஸ்) காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா.பிரபாகரனினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் சூத்திரதாரியான ஸஹரான் ஹாஷிமுடன் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்குள்ள தொடர்புகள் குறித்தும் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரிக்கு (பெற்றிக்கலோ கெம்பஸ்) நிதி கிடைக்கப் பெற்றது தொடர்பாகவும் முழுமையாக விசாரணை நடாத்தி தெளிவை ஏற்படுத்துமாறு கோரியே இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாக ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா.பிரபாகரன் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |