Home » » கல்முனையில் அநாவசியமான பிரச்சினையை ஏற்படுத்திய தேரர்! எச்.எம்.எம்.ஹரீஸ் குற்றச்சாட்டு

கல்முனையில் அநாவசியமான பிரச்சினையை ஏற்படுத்திய தேரர்! எச்.எம்.எம்.ஹரீஸ் குற்றச்சாட்டு

கல்முனை சுபத்திராராமய விகாராதிபதி ரண்முத்து தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து அநாவசியமான பிரச்சினையை ஏற்படுத்தியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே ஹரீஸ் எம்.பி இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி கல்முனை சுபத்திராராமய விகாராதிபதி ரண்முத்து தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து அநாவசியமான பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளார்.
நிலத்தொடர்பற்ற பகுதிகளை இணைத்து உப பிரதேச செயலகம் அமைக்கப்பட்டிருப்பதால் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது.
இதேவேளை, இதன்போது கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பான இறுதி முடிவினை ஆராய்ந்து இவ்விரு சமூக பிரதிநிதிகளும் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |