உலகத்தில் தோல் நோயால் அவதியுறும் மக்கள் தொகை அதிகரித்துவருவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், தோல் நோய்க்காக பல்வேறுபட்ட காரணங்கள் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளப்பட்டாலும் அடிப்படையாக சிறுநீர் மற்றும் மலங்கழித்தல் ஆகிய செயன்முறைகளிலுள்ள தழும்பல் தன்மைகளை சுட்டிக்காட்டுகிறார் சித்த மருத்துவர் யோக வித்தியா.
குறிப்பாக அன்றைய காலத்தில் எமது மக்களிடையே காணப்பட்ட அரோக்கியமான சித்த மருத்துவ பின்பற்றுதல்கள் மனிதர்களிடையே தோல் நோய் குறித்த தாக்கத்தை கட்டுப்படுத்தியிருந்ததாக கூறும் மருத்துவர், சிறுநீர் மற்றும் மலங்கழித்தல் என்பவற்றை தவிர்ப்பதனால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து விளக்குகின்றார்.
எக்சிமா எனப்படும் கரப்பான் உள்ளிட்ட பல தோல் நோய்கள், உடலிலிருந்து கழிவுகள் உரிய நேரத்திற்கு வெளியேற்றபடாத நிலையில் அந்த கழிவுகளை வெளியேற்றும் உடலியல் செயன்முறையூடாகவே தோற்றம்பெறுவதாக சுட்டிக்காட்டுகிறார்.
இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் என்ன? நாம் ஏன் சிறு நீர் மற்றும் மலம் உள்ளிட்ட கழிவகற்றல் செயன்முறையை கிரமமாக மேற்கொள்ளவேண்டும்? போன்ற பல கேள்விகளுக்கு பல முக்கியமான தகவல்களை பகிர்ந்துகொள்கிறார் அவர்....
0 comments: