Home » » விளைவுகள் மோசமாக இருக்கும்! கல்முனையில் எச்சரித்த ஞானசார தேரர்

விளைவுகள் மோசமாக இருக்கும்! கல்முனையில் எச்சரித்த ஞானசார தேரர்


நான் நினைத்தால் ஐந்து நாட்களில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த முடியும் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவ்வாறு செய்தால் விளைவுகள் படுமோசமாக இருக்கும் என கல்முனையில் வைத்து இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒரே நாட்டின் தாய் பிள்ளைகளை போல நாம் செயற்படவேண்டும். விரைவில் இந்த பிரச்சினையை முடித்து பிரதேச செயலகத்தை தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பேன்.
விரைவில் உங்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வரும் என ஞானசார உறுதிமொழி வழங்கியுள்ளார்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி கல்முனையில் ஆறு தினங்களாக நடந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை கல்முனைக்கு சென்ற ஞானசார தேரர் அங்கு உண்ணாவிரதம் இருந்தவர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |