குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு காய்ச்சல் நிலை ஏற்பட்டால் தாமதியாது உடனடியாக அது தொடர்பான வைத்திய ஆலோசனையை பெற்று கொள்வது மிக முக்கியமானது என தேசிய டெங்கு தடுப்பு பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
தென் மேற்கு பருவப்பெயர்ச்சி மழைக்காலநிலையை அடுத்து ஏழு மாவட்டங்களில் டெங்கு நுளம்பு அதிகரிக்கும் அனர்த்த மாவட்டங்களாக தேசிய டெங்கு தடுப்பு பிரவு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாகவே தேசிய டெங்கு தடுப்பு பிரவு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
காய்ச்சலினால் பாதிக்கப்பட்டால் உரிய வைத்தியரிடம் சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவேண்டும். விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுதல், உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதை தவிரத்துக்கொள்ள வேண்டும். தேவையான அளவு நீரை அருந்த வேண்டும்.
0 comments: