Home » » இந்த விடயத்தை மேற்கொள்ள மாட்டேன்! கிழக்கின் புதிய ஆளுநரின் அறிவிப்பு

இந்த விடயத்தை மேற்கொள்ள மாட்டேன்! கிழக்கின் புதிய ஆளுநரின் அறிவிப்பு

எந்த ஒரு இனத்தை சார்ந்தும் தனது கடமைகளை மேற்கொள்ளப்போவதில்லை என கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இன்று கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர்,
எந்த ஒரு இனத்தை சார்ந்து கடமையாற்றாமல் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் உயர்ந்த சேவையினை வழங்குவேன்.
மக்கள் பிரதிநிதிகள் இல்லாத மாகாண சபையை கொண்டு செல்வது என்பது ஆளுநர் என்ற ரீதியில் எனது பாரிய பொறுப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா பதவி விலகியதை தொடர்ந்து, மேல் மாகாண முதலமைச்சராக கடமையாற்றிய ஷான் விஜயலால் டி சில்வா புதிய ஆளுநராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |