சிலியின் கோகிம்போ நகரில் நேற்று அதிகாலை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது ரிச்டர் மானியில் 6.5 மெக்னிரியுட்டாக பதிவாகியுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தில் அங்குள்ள வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
கோகிம்போ நகரில் இருந்து சுமார் 76 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் இன்னும் வெளியாக்கப்படவில்லை. எனினும் நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆழிபேரலை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை
0 comments: