Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் சஹ்ரானின் மனைவி



உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியும்  தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவருமான சஹ்ரானின் மனைவி  கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என். றிஸ்பான் முன்னிலையில் இன்று காலை  ஆஜர்படுத்தப்பட்டார்.
சாய்ந்தமருதில் சஹ்ரான் குழு தங்கியிருந்தபோது அங்கு இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்னர் சிலருக்கு பணம் விநியோகித்ததாகவும் அவர்களை அடையாளம் கட்ட முடியுமென்றும் சஹ்ரானின் மனைவி கூறியதையடுத்தே சஹ்ரானின் மனைவியை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதாக பொலிஸ் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Post a Comment

0 Comments