Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

காத்தான்குடியில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வெடிபொருட்கள் மீட்பு

காத்தான்குடியில் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவான வெடிபொருட்கள்மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒல்லிகுளத்தில் இன்று மாலை வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத் துவரப்பட்ட மில்ஹான் வழங்கிய தகவல்களுக்கு அமைய குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்திற்கு மில்ஹான் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இதன்படி 300 ஜெலக்நைட் குச்சிகள் மற்றும் 1000 டெட்டனேட்டர்கள் என்பன மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காத்தான்குடியில் தேசிய தௌஹீத் ஜமாத்தின் ஆயுதப்பிரிவு தலைவராக மொஹமட் மிலான் என்ற பயங்கரவாதி செயற்பட்டதாக குற்ற புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments